செவ்வாய், 20 ஜனவரி, 2015

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் வசதி எம்எல்ஏ கோரிக்கை!



திருத்துறைப்பூண்டியில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதையும் மற்றும் அரசு பேருந்து குறிப்பிட்ட தொலைவிற்கு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இதனை  தொடர்ந்து திருதுரைபூண்டியிளிருந்து  இருந்து திருச்செந்தூருக்கு பஸ் இயக்க வேண்டும் என்று எம்எல்ஏ உலகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ உலகநாதன் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்திலிருந்து தினமும் பெரியோர், வர்த்தகர்கள், பொதுமக்கள் திருச்செந்துர் முருகன் கோயிலுக்கு  சென்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வேளாங்கண்ணியிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக செல்லும் பஸ்சில்தான் செல்ல வேண்டிய நிலை இருகிறது. வேளாங்கண்ணியிலேயே டிக்கெட் முடிந்து விடுவதால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை போன்ற இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் பஸ்சில் நின்றே செல்ல வேண்டிய நிலை உள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்வதால் மிக நெருக்கடிக்கும், கஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.

ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி திருத்துறைப்பூண்டியிலிருந்து  திருச்செந்தூர் வழித்தடத்தில் ஒரு புதிய பேருந்து இயக்க வேண்டும்.  இவ்வாறு உலகநாதன் கூறியுள்ளார்.

கோரிக்கை நிறைவேறினால் திருத்துறைபூண்டி பொதுமக்கள் அனைவருக்கும் சந்தோஷம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka