செவ்வாய், 27 ஜனவரி, 2015

அனுமதியின்றி பிரசாரம்: நடிகை குயிலி மீதான வழக்கு ஒத்திவைப்பு.




அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக நடிகை குயிலி மீது தொடரப்பட்ட வழக்கு மார்ச் 30–ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்தாண்டு நடந்த நாகை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கோபாலுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டியில் நடிகை குயிலி பிரசாரம் செய்தார். புதிய பேருந்து நிலையம் அருகே மட்டும் பிரசாரம் செய்ய அனுமதி பெற்ற நிலையில் நகர் முழுவதும் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்தார்.
இது தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நடிகை குயிலி, வக்கீல் அன்பரசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்தது. இருவரும் ஆஜராகாததால் நீதிபதி சிவா வழக்கை மார்ச் 30–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka