சனி, 10 ஜனவரி, 2015

கொக்காலடி கொலை செய்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவர் வெள்ளிக்கிழமை கைது

திருத்துறைப்பூண்டி அருகே சகோதரியின் கணவரை கொலை செய்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல்சரகம் கொக்காலடி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (44). இவர் நாகை மாவட்டம் செம்பியன்மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டுகளாக ரேவதி செம்பியன் மணக்குடி கிராமத்தில் தனது சகோதரர் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் கொக்காலடி கிராமத்தில் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரேவதியை கர்ணன் தாக்கி, தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ரேவதியின் சகோதரர்கள் செல்வராஜ், ரெங்கசாமி ஆகியோர் கர்ணனனிடம் தகராறு செய்து, அவரை கட்டையால் தாக்கியதில் கர்ணன் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, ரேவதி, செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ரெங்கசாமியை தேடி வந்தனர்.

இந்நிலையில், கொக்காலடி பகுதியில் மறைந்து இருந்த ரெங்கசாமியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka