வெள்ளி, 30 ஜனவரி, 2015

வேலைக்கு போகாததால் தாய் கண்டிப்பு: விஷம் குடித்து மகன் தற்கொலை

திருத்துறைப்பூண்டி,: வேலைக்கு போகாததை கண்டித்ததால் மகன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொக்கலாடி கீழகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி. மகன் ராஜேஸ் (20). இவர் பிட்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜேஸ் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் சீதாலட்சுமி இரவு மகனை கண்டித்தார். இதனால் மனமுடைந்த ராஜேஸ் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து சீதாலட்சுமி மகனை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜேஸ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சீதாலெட்சுமி அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, எஸ்ஐ அருள்பிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka