சனி, 24 ஜனவரி, 2015

திருவாரூரில் 62 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்




"திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை, 62 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது,'' என, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில், நடப்பாண்டில் மொத்தம், 3 லட்சத்து, 50 ஆயிரம் ஏக்கரில், சம்பா சாகுபடியை விவசாயிகள் செய்திருந்தனர். இந்த பயிர்கள், அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளதால், அறுவடை பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும், 431 நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும், 11 நடமாடும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் நடந்து வருகிறது.

நெல் கொள்முதல் குறித்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி கூறியதாவது:
மாவட்டத்தில், கடந்த, 22ம் தேதி வரை, 62 ஆயிரத்து, 100 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு, 8,000 மெட்ரிக் டன் கொள்முதல் நடைப்பெற்று வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு, 3 லட்சத்து, 73 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்த, 2011-12ம் ஆண்டில் அதிகபட்சமாக, 6 லட்சத்து, 65 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. அந்த ஆண்டை போல நடப்பாண்டிலும் மகசூல் அதிகமாக கிடைத்து வருவதால், 7 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏதேனும் குறைபாடு இருப்பின், முதுநிலைமண்டல மேலாளர் அலுவலகத்துக்கு, 04366 222532 மற்றும் முதுநிலை மண்டல மேலாளருக்கு, 94422 55542 என்ற ஃபோன் எண்களில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka