புதன், 10 டிசம்பர், 2014

புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு சேவை திட்டம்

திருத்துறைப்பூண்டி, :  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் தூய்மை இந்தியா மற்றும் சுகாதார விழிப்புணர்வு சேவைத் திட்டம் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் வக்கீல் ராஜாராம் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஆலீஸ் எமிலி, தலைமையாசிரியர் அந்தோணிமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நல மருத்துவர் கண்ணம்மை பள்ளி மாணவிகளிடையே தூய்மை இந்தியா மற்றும் சுகாதாரம் குறித்து பேசினார். ஒவ்வொரு வகுப்பறைக்கும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், ஆதப்பன், அப்துல் ரஹ்மான், சதீஸ்குமார், பாலசுப்பிரமணியன், தணிகாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயலாளர் பாலு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka