புதன், 3 டிசம்பர், 2014

கோட்டூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன் - மனைவி படுகாயம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரம் பெரியகுளத்தெருவை சேர்ந்தவர் ஜெபருல்லா (வயது38). இவருடைய மனைவி ரசூல்பீவி (30). இவர்களுடைய மகன் சல்மான்கான். நேற்று காலை ஜெபருல்லா தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஜெபருல்லா, அவருடைய மனைவி ரசூல்பீவி ஆகிய 2 பேரும், இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka