புதன், 10 டிசம்பர், 2014

வக்கீல்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி:திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சங்கத் செயலாளர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி, வக்கீல்கள் சாலை மறியல் செய்தனர்.திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோவிலைச் சேர்ந்த அந்தோணிராஜ், 30, என்பவரை தாக்கி காயப்படுத்தியதாக, வக்கீல்கள் சங்க செயலாளர் ரஜினி மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதை அறிந்த வக்கீல்கள், நேற்று காலை, 10.30 மணிக்கு, சாலை மறியலில் ஈடுபட்டனர். வழக்கு பதிவு செய்ய காரணமான இன்ஸ்பெக்டர் அனந்தவேலுவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என வலியுறுத்தினர். டி.எஸ்.பி., அப்பாசாமி, தாசில்தார் அன்பழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், சாலை மறியல் கைவிடப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka