ஞாயிறு, 7 டிசம்பர், 2014

திருத்துறைபூண்டியில் ஆபத்தான நிலையில் மாணவர் விடுதி: புதிய விடுதியை திறக்க கோரிக்கை

திருத்துறைபூண்டியில் ஆபத்தான நிலையில் இயங்கி வரும் மாணவர் விடுதியில் மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுதியில் திருத்துறைபூண்டி சுற்றுவட்டார பகுதியை செர்ந்த 52 மாணவர்கள் தங்கி, மேல்நிலை பள்ளியில் பயின்று வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த கட்டடத்தில் இயங்கி வந்த மாணவர் விடுதியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு தற்போது இயங்கி வருகிற வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மாணவர் விடுதி ஒன்று நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்கள் தாங்கள் ஆபத்தான நிலையில் தங்கியிருப்பதை பலமுறை எடுத்து கூறியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறையினரிடம் கேட்டபோது புதிய கட்டடத்தை பற்றி கருத்து கூற மறுத்த அவர்கள், தற்போது மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வாடகை கட்டடத்தை சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka