ஞாயிறு, 28 டிசம்பர், 2014

ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

திருத்துறைப்பூண்டி,: நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் ஏஇஓ அலுவலகம் கட்டாததை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருத்துறைப்பூண்டி வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார துணைத் தலைவர் மெய்யநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வேதரெத்தினம், செயற்குழு உறுப்பினர் விஜயா முன்னிலை வகித்தனர். வட்டாரத் துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். வட்டார செயல்பாடு குறித்து வட்டார செயலாளர் தெ.வேதரெத்தினம் விளக்கினார். மாநில துணை செயலாளரும், மாவட்ட செயலாளருமான மதிவாணன் மாநில அமைப்பு முடிவுகள், இயக்கத்தின் செயல்பாடு குறித்து பேசினார். முருகானந்தம், சுவாமிநாதன், முருகையன், ரவி, சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள தொடக்க-நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்து மாணவர் நலன் காத்திட ஒன்றிய ஆணையரை கேட்டுக்கொள்வது, புதிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலகம் கட்ட ரூபாய் 17.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, இடம் தேர்வு செய்து முடிந்தும் ஒரு ஆண்டு ஆகியும் பணி தொடங்காமல் உள்ளது.இப் பணி தொடங்க வலியுறுத்தி வட்டாரக் கிளை சார்பில் போராட்டம் நடத்துவது. ஆசிரியர்களின் எல்ஐசி காப்பீட்டுத் தொகைகளில் உள்ள குறைபாடுகளையும், 2013ல் கட்டிய தொகையில் உள்ள குறைபாடுகளையும் சரி செய்ய கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka