சனி, 27 டிசம்பர், 2014

திருவாரூரில் வெள்ளிக்கிழமை விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தை தொடர வேண்டுமென்றக் கோரிக்கை யை வலியுறுத்தி திருவாரூரில் வெள்ளிக்கிழமை விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கர்நாடகம் காவிரி யில் புதிய அணைகள் கட்டுவதைத் தடுக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கண்காணிப்புக்குழு, ஒழுங்காற்று ஆணையம் அமைக்க வேண்டும், காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் படிப்படியாக குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்டக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட த்தில் இதேக் கோரிக்கைகளை வலியுறுத்தி 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka