புதன், 10 டிசம்பர், 2014

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டுவது கண்டிக்கத்தக்கது: சீமான்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார்.
மாநில மாணவர் பாசறை அமைப்பாளர் கார்த்தி, ஒன்றிய செயலாளர் சரவணன், நகரச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
கர்நாடக அரசு காவிரி ஆற்றில் அணைகளை கட்டி மின்சாரம் தயாரிக்க போவதாக கூறுவது அப்பட்டமான பொய். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கர்நாடகத்தில் இருந்து வரும் காவிரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தம் என்றால், தமிழகத்தின் நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கிரி, அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் தமிழனுக்கே சொந்தம்.
வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். அப்போது உங்களுக்காக உழைக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கு வாக்குகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தஞ்சை மண்டல பொறுப்பாளர்கள் மணிசெந்தில், நல்லதுரை, திருவாரூர் மண்டல பொறுப்பாளர் தென்றல்சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka