புதன், 3 டிசம்பர், 2014

கஞ்சா விற்பனை: இருவர் கைது

திருத்துறைப்பூண்டியில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். அப்பாசாமி, காவல் ஆய்வாளர் ஆனந்தவேலு, சார்பு -ஆய்வாளர் அருள்பிரியா ஆகியோர் நகரின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் காமராஜர் தெருவைச் சேர்ந்த குணசீலன் என்பவரது வீட்டில் 1.3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர் கஞ்சா வழக்கில் பலமுறை சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீனாட்சி வாய்க்கால் தெருவைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது வீட்டில் இருந்து 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு, இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka