சனி, 27 டிசம்பர், 2014

காவிரி பிரச்னைகளுக்காக பிரதமரை சந்தித்த விவசாயிகளுக்கு திரு வாரூரில் வெள்ளிக்கிழமை வரவேற்பு

காவிரி பிரச்னைகளுக்காக பிரதமரை சந்தித்த விவசாயிகளுக்கு திரு வாரூரில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்நாடகம் காவிரியில் அணைக் கட்டக் கூடாது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒழுங்காற்று ஆணையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் நிறைவேற்ற க்கோரி திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் பி.எஸ். மாசிலாமணி (சிபிஐ), எஸ். தம்புசாமி (சிபிஎம்), சேதுராமன், ராமமூர்த்தி (விவசாயிகள் நலச்சங்கம்) உள்ளிட்டோர் டிச.22-ம் தேதி தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மனு அளித்தனர்.
தில்லி சென்று வெள்ளிக்கிழமை திருவாரூர் திரும்பிய விவசாயிகளுக்கு வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka