ஞாயிறு, 21 டிசம்பர், 2014

செவிலியர் வீட்டில் 2 பவுன் நகை திருட்டு தொழிலாளி கைது

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது35). இவர் கிராம சுகாதார செவிலியராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் ஜெயந்தி கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் அவர் கழற்றி வைத்திருந்த 2 பவுன் தங்க வளையல்களை காணவில்லை. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீல் ஜெயந்தி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர் அருள்பிரியா, குற்ற தடுப்பு போலீசார் முத்துசாமி, செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தியின் வீட்டில் கூலிவேலை பார்த்து வந்த, ஆதிரங்கம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (52) என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். இதில் அவர் 2 பவுன் வளையல்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தங்க வளையல்களை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka