செவ்வாய், 16 டிசம்பர், 2014

ஆதிரெங்கத்தில் 23ம் தேதி தேசிய நுகர்வோர் தின கருத்தரங்கம்

நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் தெரிவித்திருப்பதாவது: 
 திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய நுகர் வோர் தினம், தேசிய உழவர் தின கருத்தரங்கம் வருகிற 23ம் தேதி நடக்கிறது. கலெக்டர் மதிவாணன் பங்கேற்று இயற்கை உழவர்களை கவுரவிக்கிறார். கருத்தரங்கில் இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் சாகுபடி, விற் பனை வாய்ப்புகள், நபார்டு மூலம் செயல்படுத்தும் வேளாண் திட்டங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கப்படுகிறது. இதில் நபார்டு, கூட்டுறவுத்துறை, வேளாண்துறை அதிகாரி கள் பங்கேற்கின்றனர். கருத்தரங்கில் பங்கேற்க 04369 -220954, செல் 9842607609 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka