புதன், 10 டிசம்பர், 2014

இலவச கண்சிகிச்சை முகாம்

திருத்துறைப்பூண்டி, : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 134வது இலவச கண் சிகிச்சை முகாம் மங்கை மஹாலில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் வக்கீல் ராஜாராம் தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் கணேசன், பொருளாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் சதா பத்மநாதன் வரவேற்றார். டாக்டர்கள் அனுஜா, மோனிகா தலைமையிலான மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 217 பேருக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். 49 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், திலகமணி, பாலசுப்பிரமணியன், அப்துல்ரகுமான், ராஜேந்திரன், தலைவர் தேர்வு செந்தில்குமார், உறுப்பினர்கள் முத்துச்சாமி, ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் பாலு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka