
இந்த நிலையில் உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதாக அகிலாவிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு தசரதசக்கரவர்த்தி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தசரதசக்கரவர்த்திக்கும், வேறோரு பெண்ணுக்கும் வருகிற 25–ந் தேதி(வெள்ளிக்கிழமை) 2–வது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அகிலா ஊருக்கு வந்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
பின்னர் அவர், கணவரின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி நேற்று முன்தினம் தனது பெற்றோருடன் தசரத சக்கரவர்த்தி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டுகள் கண்ணகி, அபிராமிசுந்தரி, மீனாட்சி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தசரதசக்கரவர்த்தியை கைது செய்தனர்