
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொதுக்குழுக் கூட்டம்

நெல் மூட்டைகள் ஏற்ற அனுமதி வழங்காததை கண்டித்து போராட்டம் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் நல சங்க செயலாளர் அக்ரோ சீனிவாசன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை இந்த பகுதியில் உள்ள லாரிகள் மூலம் திருவாரூருக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிமாட்டங்களுக்கு அனுப்புவதற்கு தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
20132014ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள லாரிகளுக்கு நெல் மூட்டைகள் லோடு ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இங்கிருந்து நீடாமங்கலம், பேரளம் பகுதிகளுக்கு லோடு ஏற்றப்பட்டது. தற்போது லோடு ஏற்ற அனுமதி வழங்காததால் தாலுகாவில் உள்ள 324 லாரிகளில் வேலைசெய்யும் 400க்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். எனவே லாரிகளுக்கு நெல் மூட்டைகள் ஏற்ற அனுமதி வழங்கா விட்டால் வருகிற 10ம்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)