வியாழன், 26 மே, 2011

முத்துப்பேட்டை அருகே இடி தாக்கி விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே இடி தாக்கி விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.

முத்துப்பேட்டை அருகிலுள்ள கீழநம்மங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வயலில் ஆடுகளை பட்டியில் கட்டிவிட்டு, அங்கேயே காவலுக்குப் படுத்திருந்தாராம். அப்போது இடி, மின்னலுடன் பலத்த பலத்த மழை பெய்தது. மேலும் இடி தாக்கியதில் உடல் கருகி ராஜமாணிக்கம் இறந்தார். மேலும் 3 ஆடுகளும் உடல் கருகி இறந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka