ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

திருத்துறைப்பூண்டி அருகே கணவன்–மனைவி மீது தாக்குதல்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள காடுவாகொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய தோட்டத்தில் உள்ள மரங்களை அழகிரிகோட்டகத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ்(வயது36) என்பவர் ஆட்களை வைத்து வெட்டினார். இதுதொடர்பாக ராஜமாணிக்கம்–ரமேஷ் இடையே தகராறு நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், ராஜமாணிக்கத்தை இரும்பு கம்பியால் தாக்கினார். இதை தடுக்க முயன்ற ராஜமாணிக்கத்தின் மனைவி அம்புஜம் என்பவருக்கும் இரும்பு கம்பியால் அடி விழுந்தது. படுகாயம் அடைந்த ராஜமாணிக்கம், அவருடைய மனைவி அம்புஜம் ஆகிய இருவரும் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர்கள் வீரபரஞ்ஜோதி, ராஜ், கல்யாணம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka