செவ்வாய், 21 ஏப்ரல், 2015

திருத்துறைப்பூண்டி அருகே மதுபான கடையில் கொள்ளை முயற்சி

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் மேற்பார்வையாளராக ஸ்டாலின் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ஸ்டாலினுக்கு, மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஸ்டாலின் கடைக்கு வந்து பார்த்தார். ஆனால் கடையில் மேஜையின் உள் அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போகவில்லை. எனினும் ஸ்டாலின் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்–இன்ஸ்பெக்டர் அருள்பிரியா மற்றும் போலீசார் மதுபான கடையில் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கடைக்கு வந்த மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கடையில் சோதனை நடத்தினர். திருவாரூரில் இருந்து மோப்ப நாய் மெர்சி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடந்தது. மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை முயற்சி தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியை அடுத்த கரும்பியூரில் உள்ள மதுபான கடையிலும் மர்ம ஆசாமிகள் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka