ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்: முதியவர் சாவு

Image result for accidentதிருத்துறைப்பூண்டி காவல் சரகம் தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (60). இவர் திருத்துறைப்பூண்டி மேட்டுத்தெருவில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைக்கு தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாரூரில் வந்த டேங்கர் லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியதில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. இதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான திருவாரூரைச் சேர்ந்த பெர்னான்டûஸ கைது செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka