ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

Image result for tntjதிருத்துறைப்பூண்டி, : பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றுதமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் பாமணி கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற் றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் அப்துல்மாலிக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பீர்முகம்மது, துணைத் தலைவர் முகம்மது மிஸ்கின் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சுலைமான் மறுமை வெற்றிக்கு என்ன வழி? என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் யாசர் அரபாத் பிர்தௌஸி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத்தின் சமுதாயப்பணிகள் என்ற தலைப்பிலும், பாஜிலா பர்வீன் ஆலிமா பெண்களும் தொழுகையும் என்ற தலைப்பிலும் பேசினர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண் டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பை பாமணி ஊராட்சி வழங்கவேண்டும். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக பாமணி மெயின்ரோட்டில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிளை தலைவர் முகம்மது யூசுப் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka