புதன், 15 ஏப்ரல், 2015

திருத்துறைப்பூண்டியில் மின் இணைப்பில் பெயர் மாற்ற இன்று முகாம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மின்வாரிய உட்கோட்ட மின் இணைப்புதாரர்கள் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான முகாம் புதன்கிழமை (ஏப். 15) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் அழகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான மின் இணைப்புகள் இறந்தவர்களின் பெயரிலும், பழைய உரிமையாளர்கள் பெயரிலும் உள்ளது. இந்த முகாமில், வாரிசுதாரர்களும், தற்போதைய வீட்டு உரிமையாளர்களும் விண்ணப்பப் படிவத்துடன், கிராம நிர்வாக அலுவலர் சான்று, வீட்டுவரி ரசீது, பட்டா நகல், உரிமையாளர் இறந்திருந்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்ட வாரிசுச் சான்று, இறப்புச் சான்று, 1-க்கும் மேற்பட்ட வாரிசுதாரர் இருந்தால், மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து ரூ. 100 மதிப்புள்ள பத்திரத்தில் ஆட்சேபணை இல்லா கடிதம் போன்றவற்றை அளித்து பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 200 செலுத்தி அதே நாளில் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka