புதன், 15 ஏப்ரல், 2015

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பா.ஜனதா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று அம்பேத்கரின் 125–வது பிறந்த நாள் விழா பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துப்பேட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பா.ஜனதா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் இளசுமணி, மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட அமைப்பு செயலாளர் ராகவன், நகர தலைவர் வினோத், ஒன்றிய தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில எஸ்.சி. அணி செயற்குழு உறுப்பினர் அரிச்சந்திரன், மாநில வணிகர் பிரிவு செயற்குழு உறுப்பினர் குருசங்கர், மாவட்ட வழக்கறிஞர்கள் அணி தலைவர் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்டு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். உலகநாதன் எம்.எல்.ஏ., விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், துணை செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வையாபுரி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், விவசாய சங்க நகர செயலாளர் வாசு, மாவட்டக்குழு உறுப்பினர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகானந்தம், நகர செயலாளர் முருகானந்தம், நகர செயலாளர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் இடிமுரசு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் முல்லைவளவன், வெற்றி, ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் தங்க.சுரேஷ், இளம் சிறுத்தைகள் பாசறை மாவட்ட அமைப்பாளர் ரஜினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், தியாகராஜன், நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ரகுபதிபாண்டியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் ஆரோக்கியசெல்வன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சங்கர், நகர செயலாளர் ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka