சனி, 11 ஏப்ரல், 2015

குடும்பத் தகராறு:தீக்குளித்தவர் மருத்துவமனையில் அனுமதி

Image result for குடும்பத் தகராறு:தீக்குளித்தவர் மருத்துவமனையில் அனுமதிதிருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் செந்தில் (36). இவர் தனது மனைவியின் உறவினர் வீட்டு திருமண விருந்து நிகழ்ச்சிக்கு செல்லவில்லையாம். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செந்தில் எடையூர் காவல்நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். எடையூர் போலீஸார் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் தீவிர சிகிச்சைக்கைகாக செந்தில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எடையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka