ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

முத்துப்பேட்டை அருகே வீடு புகுந்து தங்க நகை திருட்டு

முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது42). முருகையன் இறந்துவிட்டார். மீனாட்சி விவசாய தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் மீனாட்சி வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பித்தளை குடம், பானை, பீரோவில் இருந்த 3 கிராம் தங்க நகைகளை காணவில்லை. இதுகுறித்து மீனாட்சி அளித்த புகாரின்பேரில் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வீடு புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka