செவ்வாய், 5 மே, 2015

ஜமாபந்தியை புறக்கணிக்க விஏஓ சங்கம் முடிவு

திருவாரூர், :   தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சேகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  குடவாசல் தாலுகா அலுவலகத்தில் ஏற்கனவே இருந்து வந்த வட்ட அளவிலான சங்க கட்டடித்தை புதுப்பித்து கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில் அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததுடன் பணிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி உள்ளது. கடந்த 3 மாத காலமாக சங்கத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டும் தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், அனுமதியை உடனடியாக வழங்க கோரியும் கடந்த 2ம்தேதி மன்னார்குடியில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை (6ந்தேதி) முதல் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜமாபந்தி பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் புறகணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka