திங்கள், 11 மே, 2015

திருத்துறைப்பூண்டியில் ஜமாபந்தி நிகழ்ச்சி

 திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள 77 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி  தாலுகா அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. பட்டா மாறுதல், குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவை கேட்டு துணை கலெக்டர் அசோகனிடம்  தினந்தோறும் பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர்.  உரிய நடவடிக்கை எடுத்து அன்றைய தினமே தகுதியான மனுக்களுக்கு ஆணை வழங்கப்படுகிறது. ஜமாபந்தியில் தாசில்தார் அன்புமணி, தனி தாசில்தார்கள் மலர்க்கொடி, ரெங்கசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரவடிவேலு, துணை தாசில்தார் அன்பழகன், செந்தில்குமார், வசுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka