திங்கள், 11 மே, 2015

அரசு கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி 19ம் தேதி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, :  திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாணவர் பெருமன்றம் முடிவு செய்துள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றிய நகர  அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் போராட்ட அறிவிப்பு ஆலோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. அனைந்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் குமார், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் முருகேசு, துணை தலைவர் சுஜாதா, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரிக்கு நிரந்திர கட்டிடம், விடுதி கட்டித்தர வேண்டும். கொருக்கை அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே விடுதி கட்டித்தர வேண்டும். திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே உள்ள அரசு மாணவியர் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 19ம் தேதி திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka