புதன், 6 மே, 2015

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஆலோசனை கூட்டம்

திருத்துறைப்பூண்டி, : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில்  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஆலோசனை கூட்டம் பிஎஸ்ஆர் இல்லத்தில் நடைபெற்றது. தலைவர் கலைமகள் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆசிரியர் ராஜேந்தர், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆசிரியர் நேரு வரவேற்றார்.
கூட்டத்தில், எம்எல்ஏ உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர்கள் சந்திரராமன், ராஜா, ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், துணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயா, அனைந்திந்திய பேசினர். கூட்டத்தில் இயக்குநர் பாலசந்தர், எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் நேபாள பூகம்பத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வருகிற ஜுன் 6ம்தேதி மக்கள் கலை விழா நடத்துவதற்காக கலைவிழாவிற்கு 11 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது. இதில் தலைவர் கலைமகள் சேகர், செயலாளர் நேரு, பொருளாளர் வக்கீல் அருள்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அஞ்சலத்துறை அன்பழகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka