வெள்ளி, 6 மே, 2016

அம்பேத்கர் சிலை அருகில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

திருத்துறைப்பூண்டி நகர் அம்பேத்கர் சிலை அருகில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கொடி அணிவகுப்பு பேரணிக்கு திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். கண்ணதாசன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தார்.

பேரணிக்கு காவல் ஆய்வாளர் அமுதாராணி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி, போக்குவரத்து காவல்பிரிவு ஆய்வாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், போக்குவரத்து காவல் பிரிவு சார்பு ஆய்வாளர்கள் கபீர்தாஸ், கல்விக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka