வியாழன், 5 மே, 2016

காவிரி படு​கையை பாது​காக்​கப்​பட்ட மண்​ட​ல​மாக ​அறி​விக்​கக் ​கோரி முற்​றுகை

காவிரி படு​கையை பாது​காக்​கப்​பட்ட மண்​ட​ல​மாக அறி​விக்​கக் கோரி,​​ மீத்​தேன் திட்ட எதிர்ப்​புக் கூட்​ட​மைப்​பி​னர் திரு​வா​ரூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன்பு புதன்​கி​ழமை முற்​று​கைப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​

காவிரி டெல்டா பகு​தி​யில் ஓஎன்​ஜிசி,​​ கெயில் நிறு​வ​னம் விளை​நி​லங்​க​ளில் குழாய் பதித்து கச்சா எண்​ணெய் எடுத்து வரு​கி​றது.​

இத​னால் நிலத்​தடி நீர் பாதிக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ சுற்​றுச்​சூ​ழல் பாதிக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ விவ​சா​யம் அழிந்து போகும் நிலை ஏற்​பட்டு வரு​கி​றது.​

இதைக் கண்​டித்து,​​ விவ​சாய அமைப்​பு​கள் மற்​றும் மீத்​தேன் எதிர்ப்​புக் கூட்​ட​மைப்பு சார்​பில் பல்​வேறு போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​

இந்​நி​லை​யில்,​​ மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை மீத்​தேன் திட்ட எதிர்ப்​புக் கூட்​ட​மைப்​பி​னர் புதன்​கி​ழமை முற்​று​கை​யிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​

ஓஎன்​ஜிசி மற்​றும் கெயில் நிறு​வ​னத்​துக்கு காவிரி டெல்​டா​வில் தடை விதிக்க வேண்​டும்,​​ விளை​நி​லங்​க​ளில் குழாய் பதிக்​கக் கூடாது,​​ காவிரி படு​கையை பாது​காக்​கப்​பட்ட மண்​ட​ல​மாக அறி​விக்க வேண்​டு​மென்ற கோரிக்​கையை வலி​யு​றுத்தி கோஷங்​களை எழுப்​பி​னர்.​

மீத்​தேன் திட்ட எதிர்ப்​புக் கூட்​ட​மைப்​பின் தலைமை ஒருங்​கி​ணைப்​பா​ளர் த.​ ஜெய​ரா​மன் தலை​மை​யில்,​​ முற்​று​கை​யில் ஈடு​பட்ட 146 பெண்​கள் உள்​ளிட்ட 247 பேரை போலீ​ஸார் ​ கைது செய்​த​னர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka