புதன், 11 மே, 2016

விவசாயிகள் கைது : பதற்றம்

திருத்துறைப்பூண்டி :  காவிரி பிரச்னையில் மவுனமாக இருப்பதை கண்டித்து இன்று வேதாரண்யம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நாகை மாவட்ட காவல் துறை மாவட்ட எல்லைக்கு உள்ளே  போராட்டக்காரர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடையை மீறி கருப்பு கொடி காட்ட விவசாயிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.  காவல் துறையும் கருப்பு கொடி காட்ட முயற்சி செய்யும் விவசாயிகளை திருத்துறைப்பூண்டியில் சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் திருத்துறைப்பூண்டியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka