திங்கள், 16 மே, 2016

திருத்துறைப்பூண்டி தொகுதி அனைத்து வேட்பாளர்களும் வாக்களித்தனர்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள குன்னலூர் குடிசேத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் ஆடரலசன் வாக்களித்தார். இந்திய கம்னியூஸ்ட் கட்சி வேட்பாளர் உலகநாதன் சிங்களாந்தி விக்டரி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி புனித தெரசாள் தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

முன்னாள் எம்எல்ஏ.பழனிச்சாமி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், முன்னாள் நகரமன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜ், திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர். அதிமுக நகர செயலாளர் சண்முகசுந்தரம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். பாஜக. வேட்பாளர் உதயகுமார் இருள்நீக்கி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

திருத்துறைபூண்டியில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை இரவு பெய்தும் நேற்று காலை முதலும் பலத்த மழை பெய்தது. மதியம் 12 மணிக்கு மேல் மழை குறைந்து விட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் மின்தடை இருந்து வந்தது. நேற்று காலை 9 மணி வரை மின்தடை இருந்ததால் வாக்களிக்க வந்த வேட்பாளர்கள், வாக்காளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நேற்று முழுவதும் மின்தடை அடிக்கடி ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மதிவாணன் தன் வாக்கை பதிவு செய்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka