புதன், 5 ஏப்ரல், 2017

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்



கோட்டூர் ஒன்றியம்,பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் காந்தாரி,பாம்புகனி, இடச்சிமூலை,மறவாதி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருகவாழ்ந்தான் ஊராட்சி பொதுமக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரியக்கோட்டை கூட்டுகுடிநீர்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது பெருகவாழ்ந்தான் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரில் உப்பு தன்மை அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெருகவாழ்ந்தானிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருணாவூர் கிராமத்திற்கு வரும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் இணைத்து பெருகவாழ்ந்தான் கிராமத்திற்குகுடிநீர்வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் மனுகொடுத்து கடந்த 10 ஆண்டுகளாக சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கடும் வறட்சியின் காரணமாக பெருகவாழ்ந்தான் பகுதியில் ஆழ்குழாய் கிணற்றிலும், கைபம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனே பெருகவாழ்ந்தான் பகுதி மக்களை சந்தித்து குடிநீர்தட்டுபாட்டை போக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். தினமும் வேன் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாமணி ஆற்றுப்படுகையிலிருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்துகுடிநீர் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பெருகவாழ்ந்தான் கடைவீதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெங்கடேஸ்வரர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடுஏற்பட்டதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் மன்னார்குடி -முத்துப்பேட்டை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka