புதன், 5 ஏப்ரல், 2017

விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி,

விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை வழங்கவேண்டும். விவசாயிகள் வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் எழிலரசன் தலைமை தாங்கினார். மாநிலபொதுக்குழு உறுப்பினர் சங்கரவடிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் பாஸ்கர் வரவேற்றார். இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தலைவர் தாஹிர், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரசார் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பார்வையாளராக பொதுச்செயலாளர் அன்பு.வீரமணி, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் குகநாதன், வெங்கடேசன், நகர துணைத்தலைவர் பழக்கடை சண்முகம், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் தல.கோவிந்தராஜ், ஐ.என்.யு.சி. மாநில பொதுச்செயலாளர் என்.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், முத்துப்பேட்டை வட்டார செயலாளர் ஆனந்தரெட்டி, இளைஞர் காங்கிரசை சேர்ந்த ரோஜர் குமார், மணலி பிரகாஷ், காளிதாஸ், புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் நகரச்செயலாளர் சிவராமன் நன்றி கூறினார்.

வருவாய்த்துறை அலுவலர் சங்கம்

இதேபோல திருத்துறைப்பூண்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வட்டச்செயலாளர் குணசீலன் தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் மதியழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோக், வட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka