திங்கள், 2 ஜனவரி, 2017

கட்டிமேடு, அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு, அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஆதிரெங்கம் ஊராட்சியில் 7 நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில்
ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் எம்.எஸ். பாலு தலைமை வகித்தார். கட்டிமேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் எம்.இ.ஏ.ஆர். அப்துல் முனாப், இராம. தமிழ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுகலை ஆசிரியர் செ. முகுந்தன் முகாம் அறிக்கையை சமர்ப்பித்து, பொதுமக்களுக்கு கண்தான விழிப்புணர்வு, இருதய நோய், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட சான்றிதழ்களை கட்டிமேடு  இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக் கிளை மேலாளர் டி. நாகேந்திரன் வழங்கினார்.
திருவாருர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. பார்வதி பங்கேற்று, மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பேசினார்.
திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஏ. குமுதம், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் வி. சின்னப்பா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதுகலை ஆசிரியர் சி. சந்திரசேகரன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கே. பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் வி. வடிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka