Pages

சனி, 28 பிப்ரவரி, 2015

2004 - 2005 ஆண்டு மாணவர்களின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது





2004 - 2005 ஆண்டு மாணவர்களின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருவாருர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி வட்டம் விளக்குடி அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று 27-02-2015(வெள்ளி அன்று) 2004 - 2005 ஆண்டு மாணவர்களின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவினை விளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் A.கோவிந்தசாமி அவர்கள் தேசியக்கொடி ஏற்றி துவங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளை ஓன்றிய குழு உறுப்பினர் திருமதி S.ஞானசௌந்தரி அவர்கள் துவங்கி வைத்தார்.

மாலை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி A.குமுதம் M.sc B.Ed அவர்கள் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு M.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு முன்னாள் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் 2004 - 2005 மாணவர்கள் முன்னாள் ஆசிரிய ஆசிரியைகளூக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். முன்னாள் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஐயா A.சுந்தரேசன் அவர்களின் பெயரில் நினைவு சுழற்கோப்பை வழங்கபட்டது.
 

மேலும் இப்பள்ளி மேல்நிலை பள்ளியாக மாற்றபடுவதற்காக 2004 - 2005 மாணவர்கள் சார்பாக நன்கொடை வழங்கபட்டது. அதைதொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் பள்ளி ஆசிரியை திருமதி K.தனம் M.A,B.Ed அவர்கள் நன்றியுரையாற்றினார் 















2 கருத்துகள்: